கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் நாம் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில், கல்வி போன்றவற்றை தாண்டியும் நாம் பலவிதமான தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இணையத்தை பயன்படும் தேவை உருவாகியிருக்கிறது. இந்த புதிய சாத்தியங்கள் நாம் எமது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அதிகளவில் பகிரும் ஒரு நிலையையும் உருவாக்கியிருக்கிறது.
இவ்வாறு இணையத்தல் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதும் அவ்வாறு பகிரப்படும் விடையங்களின் தகவல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் எனது சில அவதானிப்புக்களையும் கருத்துக்களையும் இங்கு பகிர்கிறேன்.
எனக்கு இணையத்தில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிரும் பழக்கம் உள்ளது. ஆனாலும் இது எல்லாருக்கும் பொருந்தும் என்றும் நான் நினைக்கவில்லை. சிலருக்கு பாதுகாப்பு காரணங்களால் இது முடியாமல் போகலாம். சிலருக்கு தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.
உங்களின் கருத்து என்ன?
You must be logged in to post a comment.